
தமிழகத்தில் நேரிடும் சாலை விபத்துகளில் 50 சதவீதம் நெடுஞ்சாலைகளில்தான் நடைபெறுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து துறையை சேர்ந்த வல்லுநர்கள் குழு புதிய திட்டம் வகுத்து, தமிழகஅரசிடம் வழங்கியது. இதையடுத்து, 2017-ல் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிய தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்