
திருவள்ளூர் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி சுகாதார மாவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளின் அருகிலேயே கரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக 7 நடமாடும் கரோனா தடுப்பூசி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அக்குழுக்களுக்கான வாகனங்களின் செயல்பாட்டை நேற்று பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு பாடலின் குறுந்தகடையும் வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்