Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713295.jpgகடலில் ஃபைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி மீன்கள், வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

கடலில் ஃபைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, மீன்கள், வலைகளை பறித்துச் சென்றனர்.

நாகை கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தசெல்வக்குமார் என்பவரின் ஃபைபர் படகில், ரவீந்திரன்(28), கிருஷ்ணராஜ்(55), வேல்முருகன்(35), செல்வம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 9 பேர், மீனவர்களின் படகை சுற்றிவளைத்து, மீனவர்களைத் தாக்கி, 500 கிலோ மீன்கள், 2 செல்போன்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...