
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலையோரம் விற்பனைக்கு வைத்திருந்த விநாயகர் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் சிலைகளை திரும்ப ஒப்படைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாநாளை (10-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்துவழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்