
தஞ்சாவூரில் ‘ஆஃப் பாயில்’ வர தாமதமானதால், மதுபோதையில் ஹோட்டலை சூறையாடிய போலீஸார் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இ.பி காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(45), திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த, தஞ்சாவூர் ஞானம் நகரைச் சேர்ந்த அருண்குமார்(30), தொல்காப்பியர் சதுக்கம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் விஜி(35) ஆகியோர் கடந்த 6-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்