
பாண்டிகோயில் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தில் மாட்டுத்தாவணி வழியாக வாகனங்கள் செல்ல அணுகு பாலம் இல்லாததால், இப்பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் தீர வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தினசரி 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவ்வழியாக வரும் வாகனங்களும், திருச்சியிலிருந்து நான்குவழிச் சாலை வழியாக வரும் வாகனங் களும் பாண்டி கோயில் அருகே கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் இணைகின்றன. இதே இடத்தில் மதுரை நகர்ப்பகுதியிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையும் குறுக்கிடுவதால் இச்சந்திப்பில் நெரிசல் அதிகரித்து, இங்குள்ள சிக்னலில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதும் வழக்கமாகி விட்டது. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாண்டி கோயில் சந்திப்பில் ரூ.50 கோடியில் புதிதாக மேம்பாலம் அமைக்க் திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் தொடங்கின. இந்த மேம்பாலப் பணி மந்தகதியில் நடப்பதால் தற்போதுவரை பாலம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்