
எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளிதுறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் எளிதாக வருவதற்காக, பெங்களூரு - சென்னை அதிவேகநெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இச்சாலைக்காக ஆந்திராவின் சித்தூரிலிருந்து, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை புதிய சாலைக்காக, ஆந்திராவில் 2,186 ஏக்கர், தமிழகத்தில்திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்