
தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகம், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 15 பேர் படகு மூலம்ரகசியமாக தமிழகம் வந்துள்ளதாகவும், அவர்கள் தமிழகத்தில் இருந்துகேரளா சென்று, பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில போலீஸாருக்கு உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்