
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. அவருக்குதொடர்பு உடையதாக கூறப்படும் நபரின் சென்னை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் 2016 - 2021 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.23 கோடி சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை ஊழல்தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்