
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடக்கிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த அக்டோபர் 6, 9 ஆகிய தேதி களில் 2 கட்டங்களாக நடந்தன. அத் துடன், இதர 28 மாவட்டங்களில் காலி யாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக் கான இடைத்தேர்தலும் 9-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்கு கள் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்