
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போக்குவரத்து காவலரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் தாக்கியதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் வாசல் சரவண பொய்கை பகுதியில் கடந்த 18-ம் தேதி போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் என்.முத்துக்குமார் (42) போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் வந்த அரசு கார், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்