
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அண்டை நாடான வங்கதேசத்தில் துர்கா பூஜையில் ஈடுபட்டுவந்த இந்துக்கள் மீதும், இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. வங்கதேசத்தில், இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக பெரும்பாலான இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்துக்களின் குடியிருப்புகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்