
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் செயல்பட்டு வந்த தனியார் பெண் குழந்தைகள் காப்பகம் பூட்டி, சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த காப்பகத்தை நடத்தி வந்த அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவர் மீது நேற்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடுமியான்மலையில் தனியார் குழந்தைகள் காப்பகம் கடந்த 2019 முதல் செயல்பட்டு வந்தது. இதற்கு குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை கலைமகள் தலைவராகவும், அவரது கணவர் ராஜேந்திரன் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்