
தூய்மை கரூர் திட்டத்தில் கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
தூய்மை கரூர் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சிப் பகுதியில் சிறப்புத் தூய்மைப் பணி தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் நகராட்சி திருகாம்புலியூர் மந்தையில் இன்று (அக். 8ம் தேதி) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்புத் தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து, காலையே பணிக்கு வர அறிவுறுத்தி, அவர்கள் காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்வது குறித்தும், அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்