
திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் டெண்ட் கொட்டகைகளில் வசிக்கும் 10 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள், இலவச வீட்டுமனை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ஏங்குகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக டென்ட் கொட்டகைகளில் 10 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் வசிக்கின்றன. கோயில் நிலத்தில் வசித்து வரும் இக்குடும்பங்கள், நிரந்தரமாக வசிக்க ஏதுவான இலவச வீட்டுமனை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்