
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் கார்பேரணி நேற்று சென்னை வந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்றதன்75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை சார்பில் ‘சுதர்சன் பாரத்பரிக்ரமா' என்ற கார் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இது கடந்த அக். 2-ம் தேதி புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட லக்னோ, வாராணசி, கொல்கத்தா, ஹைதராபாத் வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்