
மேல்மருவத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள்கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி பொன்னி மேற்பார்வையில், கூடுதல் எஸ்பிராஜாராம் தலைமையில் காவல்ஆய்வாளர் இந்திரா, உதவி காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், பாலச்சந்தர் மற்றும் போலீஸார், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் பழமையான மீனாட்சி அம்மனின் ஐம்பொன் சிலை இருந்ததைக் கண்டு, பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்