
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயித்து வருகின்றன. சமீபகாலமாக இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
தேனி மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.95-க்கும், டீசல்விலை ரூ.100.05-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவரை பெட்ரோல் மட்டுமே ரூ.100-ஐ கடந்தநிலையில் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்திருப்பது இலகு மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்