
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் டிசம்பருக்குள் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரத்தில், இந்த அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்