
பேரனோடு சேர்ந்து தமிழ் கற்கப்போகிறேன் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குசமீபத்தில் பரிந்துரை செய்தது. அதன்படி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்