
காஞ்சிபுரம் நகரம் கடந்த 1921-ம் ஆண்டு நகராட்சிஅந்தஸ்து பெற்று 40 வார்டுகளுடன் செயல்பட்டு வந்தது. நகரில் கடந்த 1975-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நத்தப்பேட்டை ஊராட்சியின் திருக்காலிமேடு கிராமப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நகருக்குஅருகில் உள்ள நத்தப்பேட்டை, திருக்காலிமேடு, தேனம்பாக்கம் ஊராட்சிகள் மற்றும் செவிலிமேடு பேரூராட்சி ஆகியவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 51 வார்டுகளுடன் கூடிய பெருநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்