
கோவை அருகே செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம் (18). கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர், கடந்த 9-ம்தேதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போன் உபயோகித்துள்ளார். பின்னர் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த செல்போன் வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ, சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்