
காப்பீடு தொடர்பான புகார்களை ஆன்லைன் மூலம் அளிக்கும் புதியசேவையை காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
உடல்நிலை பாதிக்கப்படும்போதோ, விபத்து ஏற்படும்போதோ ஏற்படும் அவசர சிகிச்சைக்கான செலவை சமாளிக்க பொதுமக்கள் பாலிசிகளை வாங்குகின்றனர். ஆனால் சில நேரங்களில் அவர்கள் எடுத்த பாலிசிகளில் இருந்துமுழு தொகையையும் சிகிச்சைக்காக காப்பீடு நிறுவனங்கள் அளிப்பதில்லை. அல்லது ஏதாவது ஒரு காரணம் கூறி அவற்றை நிராகரிக்கின்றன. இத்தகைய தருணங்களில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மீது புகார் அளிக்க பாலிசிதாரர்கள் சிரமப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்