Monday, October 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/05/large/723090.jpgகாஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா ஓரிரு மாதங்களில் திறப்பு; தறி இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன; பெண்களுக்கு 66 % வேலைவாய்ப்பு

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப் பூங்கா உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு திறக்கப்பட உள்ளது. அங்கு நிறுவப்பட்டுள்ள கைத்தறி இயந்திரங்கள் தற்போது முதல்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இங்கு 66% பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ரூ.83.33 கோடியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அரசு, ரூ.14 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலம், மானியத் தொகையாக ரூ.7.54 கோடியையும் ஒதுக்கியது. மற்ற தொகை தனியார் மூலம் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...