
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து புதுக்கோட்டை உட்பட தமிழகம் முழுவதும் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் திரண்டு போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அவரது வீட்டில் குவிந்தனர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர்மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்