
நீதிமன்றங்களில் இனி மனுக்களை தாக்கல் செய்ய பச்சை நிற லீகல் சைஸ் பேப்பரை தேடி அலைய வேண்டியதில்லை. வெள்ளை நிறஏ4 பேப்பரில் மனுக்களை தாக்கல்செய்தால் போதும் என உயர் நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பிரமாண பத்திரங்கள், பிராதுகள், ஆவணங்கள், உத்தரவுநகல்கள், வக்காலத்து நாமா மற்றும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய 100 ஜிஎஸ்எம் தரம் கொண்ட பச்சை நிற ஃபுல்-ஸ்கேப் லீகல் சைஸ் பேப்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்