
பரமக்குடி அருகே மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய், தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு, அமிர்தவல்லி தம்பதியின் மூத்த மகள் கவுசல்யா (23). இவருக்கும், பரமக்குடி அருகே செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்