
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பூர் கருமாரம்பாளையத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (47). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவிதுர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1 வயதில் மகன் உள்ளனர். சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியின் தங்கை பத்மினியின் மருமகன் ஆவார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்