
மதுரையில் அமைக்கத் திட்டமிட்டி ருந்த பிளாஸ்டிக் சாலை திட்டம் கைவிடப்பட்டதால் பிளாஸ்டிக் மறுசுழற்சி, கண்காணிப்பு இன்றி பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளது. அவை ஒட்டுமொத்தமாக வைகை ஆற்றில் குப்பையாக சேருவதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் கரோனாவுக்கு முன்பு வரை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தினமும் டன் கணக் கில் பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்திய நிறுவனங் களுக்கு அபராதமும் விதிக்கப் பட்டது. பறிமுதல் செய்த பிளாஸ்டிக்கை கொண்டு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. கரோனா பரவலால் மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் சாலை அமைக்கும் நடவடிக்கையில் பின் வாங்கியது. மேலும், பிளாஸ்டிக் கண்காணிப்பையும் மாநகராட்சி கைவிட்டதால், தற்போது கடைகள், திருமண மண் டபங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மழைக்காலங்களில் கால்வாய்கள் வழியாக வைகை ஆற்றை இந்த பிளாஸ்டிக்குகள் சென்றடை கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்