
திருச்சியில் ஏற்கெனவே ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வந்த ராணி மங்கம்மாள் கட்டிடம் ரூ.9.40 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது.
தென் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நிலப்பரப்பு முழுவதும் ஆங்காங்கே அரண்மனைகள், குளங்கள், சாலைகள், அன்னதானச் சத்திரங்கள் எழுப்பி மக்களின் மனம் கவர்ந்தவராக விளங்கியவர் ராணி மங்கம்மாள். திருச்சி மற்றும் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அவர் ஆட்சி செய்த கி.பி 17-ம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் கட்டிச் சென்ற எண்ணற்ற அடையாளங்கள் இன்றும் அவரது பெருமைகளை பறைசாற்றி வருகின்றன. திருச்சியைப் பொறுத்தமட்டில் கோட்டையிலுள்ள டவுன்ஹால், தற்போது அருங்காட்சியகமாகச் செயல்படும் கொலு மண்டபம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்