
‘ஜல் ஜீவன்' திட்டத்தின் மூலம் எனது சகோதரிகளுக்கு அவர்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த, தேவையான குடிநீர் கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ், இந்தியாவில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ள 5 ஊராட்சிகளைத் தேர்வு செய்து, அந்த கிராம மக்களிடம் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 5 ஊராட்சிகளில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி ஊராட்சியும் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்