
விஜயதசமி பண்டிகையை ஒட்டி ஆசிரியர்களிடம் ஆசிர்வாதத்தைக் குழந்தைகள் பலரும் பெற்றனர். அதேபோல், பெற்றோர்கள் குழந்தைகளை நெல்லில் எழுதி, கல்வியைத் தொடங்கினர்.
விஜயதசமியை ஒட்டி பாடங்கள், கலையைக் கற்றுத் தரும் ஆசிரியர்களிடம் குழந்தைகள் பலரும் இன்று ஆசிர்வாதம் பெற்றனர். படிப்பு, கலைகளில் சிறந்து விளங்க இந்நாளில் குருவை வழிபடுவது நம் கலாச்சாரங்களில் ஒன்று. அதேபோல் புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் சன்னதியில் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்