Saturday, October 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/17/large/727252.jpgமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை; திருக்குறுங்குடியில் பாலம் மூழ்கியதால் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்: ஆட்சியர், எஸ்பி நடவடிக்கையால் பத்திரமாக மீட்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால், திருமலை நம்பி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பலமணி நேர போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நல்ல மழை பெய்தது. திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து அல்லது ஜீப்பில் கோயிலுக்கு செல்ல வேண்டும். கரோனா கட்டுப்பாட்டில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததைஅடுத்து, நேற்று இக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் நம்பி கோயிலுக்கு சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...