
குமரியில் பெய்த தொடர் கனமழையால் 21 ஆண்டுகளில் முதல் முறையாக பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையே 32 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழை என்று பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவினர் கணக்கீட்டில் தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கோதையாற்றில் ஒரே நாளில் 30 செ.மீ.க்கு மேல் மழை பெய்திருந்தது. கடந்த இரு நாட்களாக மழை நின்று விட்டு விட்டு சாரல் மட்டும் அடித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்