
புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரி பட்டாசுக் கிடங்குகளில் சீனியர் எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே உள்ள தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நாட்டு வெடிகள் வெடித்ததில் பைக்கில் சென்ற தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், புதுச்சேரியிலிருந்து விற்பனைக்காக நாட்டு வெடிகளை உரிய பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்