
தொடர்மழை காரணமாக கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக மாடு வளர்க்கும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி பகுதிகளில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிஞ்சிப்பாடியை அடுத்த கல்குணம், புவனகிரி பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதுகுறித்து விவசாயிகள் கால்நடைத் துறைக்கு தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்