
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு தனது வரியை பலமுறை உயர்த்தி, மக்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வரியைக் குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், ஆகஸ்ட் 13-ல் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்து அறிவித்தோம். இதனால், ஆண்டுக்கு ஏற்படும் ரூ.1,160 கோடி இழப்பையும் அரசு ஏற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்