
அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவை ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு, இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “பெற்றோருடன் நேரம் செலவிடுவதை காட்டிலும், ஒரு மாணவர் அதிகநேரம் பள்ளியில் செலவிடுகிறார். ஒவ்வோர் ஆசிரியரும் மாணவர்கள் மீது காண்பிக்கும் கண்டிப்பு அனைத்தும், அவர்களின் நலனுக்காகவே என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்