
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புறநகரில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால், கடந்த 7-ம் தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரிநீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்