
தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் கடந்த 10 நாட்களாக விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இது தொடர்பாக விவசாயிகள் அலுவலகம் சென்று முறையிட்டனர்.
அப்போது, அங்கு பணிபுரியும் குமரவேல் என்ற ஊழியர், விவசாயிகளை தரக்குறைவாகப் பேசி, அவர்களை அலுவலகத்தில் இருந்து விரட்டியடித்தாராம். இதனால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்