
கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என்றும் முதல்வர் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடக்கத்திலேயே அதிகனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்