
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழகஅரசு சார்பில் ஆளுநர்ஆர்.என்.ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்