
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (27). இவர், கடந்த ஜூன் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று சிறுமியை மீட்டனர். மாதவனை பிடித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்