
விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் காஸ் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வந்தது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, இத்திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன்பின், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்