
பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் குழு இன்று வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தை கணக்கிட்டு அறிக்கை அளிக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்