
மதுரை கூடல்நகரில் சாலையின் குறுக்கே திரியும் மாடுகள் மீது மோதியதில் கார் கவிழ்ந்தது.
பள்ளிகள் திறப்புக்குப் பிறகு மீண்டும் நகர் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சாலைகளில் மாடுகள் தூங்குவதும், குறுக்கும் நெடுக் குமாக ஜல்லிக்கட்டு போல் பாய்வ துமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இத னால் சாலைகளில் செல்வோர் காயமடைவதோடு, வாகனங்களும் சேதமடைகின்றன. நேற்று கூடல் நகர் பகுதியில் சாலையின் குறுக்கே பாய்ந்த மாடுகள், சாலையில் வந்து கொண்டிருந்த காரின் மீது மோதியதில், நிலைதடுமாறி தலைகீழாகக் கார் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. முன்பு சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்த மதுரை மாநகராட்சியும், காவல்துறையும் தற்போது அந்த நடவடிக்கையை கைவிட்டதால் மதுரை சாலை களில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்து பெற்றோரும் அச்சம் அடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்