
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசின் உயர் கல்வித்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், சட்டத்துறை ஆகியவற்றின் சார்பில் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி அதை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்