
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் நிறைவான அறிக்கை தர இந்தக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்