
சேலம் மாவட்ட கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் ஏடிஜிபி அபய்குமார் சிங், மேட்டூர்அணையில் நேற்று ஆய்வு செய்தார். இதனிடையே அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,656 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 20,263 கனஅடியாகவும் இருந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்