
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்று, இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது. இதையொட்டி பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மழை பாதிப்பைக் கண்காணிக்க பொறுப்பு மற்றும் ஒருங்கிணைப்புஅதிகாரிகளாக 5 மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளைகண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்